போலி டாக்டர் பட்டம் விவகாரத்தில் கைதான ஹரீசின் வங்கி கணக்குகள் முடக்கம்

சென்னை: வங்கி கணக்குகள் முடக்கம்... போலி டாக்டர் பட்டம் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் கைதான ஹரீஷின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கில் ஹரிஷ் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வங்கிக் கணக்கில் 1 லட்சத்து 30 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுவரை 50 பேருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கியதாக புகார் எழுந்ததையடுத்து அவரது வங்கிக் கணக்கை சென்னை போலீஸார் முடக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டாக்டரிடம் கிடைக்கும் வருமானத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவர் பல திரையுலக பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் கொடுத்து நிறைய பணம் சம்பாதித்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஹரிஷ் மீது 7 போலீஸ் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.