மும்பையில் பேருந்து ஓட்டுனர்கள் ஸ்டிரைக்... மெட்ரோவில் குவியும் பயணிகள் கூட்டம்

மும்பை: மும்பையில் பெஸ்ட் பேருந்து ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளதால் மெட்ரோக்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

மும்பை மாநகர பேருந்து ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள் மெட்ரோ மற்றும் மின்சார ரயில்களில் படையெடுத்தனர்.

இதனால் மெட்ரோவில் சுமார் இரண்டு லட்சத்து 30 ஆயிரம் கூடுதல் பயணிகள் பயணித்ததாக ரயில்வே குறிப்பு தெரிவித்துள்ளது.

பலத்த மழை பெய்யும் போதும் இதுபோல் 2 லட்சம் பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோவில் கூடி விடுகிறது.