பயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் ஆக.31ம் தேதி வரை நீட்டித்தது கனடா

பயணக் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு... வெளிநாடுகளில் அதிகளவில் கொரோனா தொற்று காணப்படுவதையடுத்து தனது எல்லைகளைத் திறப்பது கனடாவுக்கு கடினமாக இருப்பதால், பயணக்கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஒரு மாதம், அதாவது ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடுகளை நீட்டிக்க இருப்பதாக அறிவித்துள்ளது கனடா. மார்ச் மாதத்தின் மத்தியப்பகுதியில், மார்ச் மாதம் 18ஆம் திகதியிலிருந்து பயணக்கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய இருப்பதாக கனடா அறிவித்திருந்தது.

முதலில் ஜூன் மாதம் 30 வரை இந்த பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாத இறுதியில் அது ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது, பயணக்கட்டுப்பாடுகள் ஆகத்து 31 வரை மீண்டும் நீட்டிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.