ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு... தமிழக அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

சென்னை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு... ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த தமிழக அரசு ஆறு வாரத்திற்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு இன்று விசாரணை வந்தது.

அப்போது உயிரிழப்பைத் தடுக்க ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழக அரசு இயற்றியதில் என்ன தவறு என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சூதாட்டத்தால் ஏற்படும் மரணங்கள், குடும்ப வறுமை ஆகியவற்றை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. மக்களை காக்கவே அரசு சட்டம் இயற்றி உள்ளதாகக் கூறுகிறது. தமிழகத்தில் லாட்டரி, குதிரைப் பந்தயம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.

மதுரை அருகே தென்னூரில் சிகரெட்டு, மதுவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தமிழக அரசின் பதிலைப் பெறாமல், ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது. இந்த வழக்கில் 6 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.