வாகன தணிக்கையில் போலீசாரை மிரட்டிய 2 பேர் மீது வழக்குப்பதிவு

தஞ்சாவூர்: வாகன தணிக்கையில் மிரட்டல்...தஞ்சை சிங்க பெருமாள் குளம் அருகே வாகன தணிக்கையின்போது , நிற்காமல் சென்றதுடன் காவலர்களை ஆபாசமாக பேசிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கபெருமாள் குளம் அருகே வகான தணிக்கை நடைபெற்ற போது அந்த வழியாக வந்த வாகனத்தின் ஓட்டுநர் காவல்துறையின் சட்ட விதிகளை மதிக்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து விரட்டி சென்று பிடித்த ஆயுதபடை காவலர் காட்டுராஜா என்பவரையும் ஆபாசவார்த்தை பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனை வீடியோவாக எடுத்த காட்டுராஜா, அதனை ஆதாரமாக வைத்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசாரை ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.