CBSE மாணவர்கள் நாளை முதல் CBSE போர்டுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: நாளை முதல் 2024 CBSE 10, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு விண்ணப்பம் ... மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2024 ஆம் கல்வியாண்டிற்கான CBSE போர்டு 10-ம் மற்றும் 12 -ம் வகுப்பு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு குறித்த அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

அதாவது, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு CBSE மாணவர்கள் நாளை முதல் cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த காரணம் கொண்டு மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை CBSE பொதுத்தேர்வு நடைபெறும் என்றும், ஆய்வக பயிற்சி சம்பந்தப்பட்ட பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் கடந்த ஆண்டில் பெறப்பட்ட அசல் மதிப்பெண் பட்டியல் மற்றும் சான்றிதழ்களை இந்த விண்ணப்பம் பூர்த்தி செய்தலின் போது மாணவர்கள் சமர்ப்பிக்க தேவையில்லை என்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்து உள்ளது.