26 ரஃபேல் எம் விமானங்கள் வாங்க மத்திய அரசு முடிவு

புதுடில்லி: இந்தியக் கடற்படைக்கு 26 ரஃபேல் எம் விமானங்கள் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியக் கடற்படைக்கு 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை வாங்குவதற்கான கோரிக்கை கடிதத்தை பிரான்ஸ் அரசிடம் இந்தியா அளித்துள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகிய விமானம் தாங்கி கப்பல்களில் பயன்படுத்துவதற்காக இந்த விமானங்கள் வாங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

5.5 பில்லியன் யூரோ மதிப்பிலான இந்த விமான ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, இந்திய கடற்படைக்கு 22 ரஃபேல் மரைன் விமானங்கள் மற்றும் நான்கு பயிற்சி விமானங்கள் வழங்கப்படும் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.