இன்று 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: கனமழைக்கு வாய்ப்பு .... இன்றைய வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவாகியுள்ளது. இது நாளை வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் 24ம் தேதி புயலாக மாறி மேற்கு வங்கத்தை நோக்கி நகரக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

இந்த புயலுக்கு சிட்ரங் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்புகள் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று சென்னையை பொறுத்தவரையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, சிவகங்கை ஆகிய பகுதிகளிலும்

மேலும் புதுக்கோட்டை, திண்டுக்கல், திருவாரூர்,திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், கோவை, பெரம்பலூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.