தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம் தகவல்... தமிழகத்தில் இரு மாவட்டங்களில் கனமழைக்கும், 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுதொடர்பான செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உள் கர்நாடகத்தின் வான்பரப்பில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதேபோல் தேனி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விருதுநகர்,தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், சென்னயில் நகரின் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.