கர்நாடகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு

அடுத்த 4 நாட்கள் மழை... கர்நாடகத்தின் கடலோரப்பகுதிகளில் அடுத்த 4 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தின் பெல்காம் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க் கிழமை) பிற்பகல் முதல் ஒருசில பகுதிகளில் பெய்தது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வடக்கு உள் கர்நாடகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

உடுப்பி, தக்‌ஷின கன்னடம், உத்தர கன்னடம் மற்றும் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிவ்மோகா, ஹாசன், குடகு மற்றும் சிக்கமகளூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யும் என மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.