இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: மழை பெய்ய வாய்ப்பு .... வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மற்றும் வடமேற்கு பருவமழை, கீழ் அடுக்கு சுழற்சி உள்பட பல காரணங்களால் கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகத்தில் நல்ல மழை பெய்து கொண்டு வருகிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம்.

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்த போது கனமழை பெய்தது என்பதும் இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இதையடுத்து இந்த நிலையில் இன்னும் 3 மணி நேரத்தில் சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து ஏற்கனவே இன்று காலை சென்னையில் உள்ள ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது