பொறியியல் பணி காரணமாக சென்னையில் இந்த தேதி வரை மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: அக்.17 வரை ரயில் சேவையில் மாற்றம் .....சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில், தாம்பரம் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரு மார்க்கத்தில் தலா 2 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன.

இதனை அடுத்து சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு இன்று முதல் வருகிற அக். 17-ம் தேதி வரை இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,

இதே தடத்தில் வருகிற அக். 8-ம் தேதி முதல் அக். 15-ம் தேதி வரை 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய இரண்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படவுள்ளன. தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு அக்.4-ம் தேதி முதல் அக்.17-ம் தேதி வரை இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,

மேலும் இதே தடத்தில் அக்.8-ம் தேதி முதல் அக்.15-ம் தேதி வரை இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய இரண்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தகவல் தெரிவித்து உள்ளது.