கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு... போலீசார் விசாரணை

ஐதராபாத்: கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு... ஐதராபாத்தில் உள்ள கஸ்தூரிபா அரசு மகளிர் கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால் மாணவிகள் 25 பேர் மயக்கமடைந்தனர்.

திடீரென ரசாயன வாயு கசிந்ததால் ஆய்வகத்தில் இருந்த மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள், அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எந்த ரசாயன வாயு கசிந்தது என்பது குறித்து தடயவியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.