முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை


சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிறு, குறு நிறுவனங்கள், மின் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்தனர். அதன்படி இன்று மின் கட்டணத்தை குறைக்க கோரி சிறு, குறு நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர், கோவை, சென்னை, ஈரோடு, நாமக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று கொண்டு வருகிறது. இதன் காரணமாக நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.


இந்நிலையில், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை நடத்தி கொண்டு வருகிறார். மின் கட்டணத்தை குறைக்க கோரி சிறு, குறு நிறுவனங்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை நடத்தி கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையின் முடிவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைக்கப்படுமா என்பது தெரியவரும்.