பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து இன்று திருச்சி வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் அரசு முறை பயணமாக நாகை மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு செல்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுர கல்லூரி பவள விழாவில் கலந்துகொள்கிறார்.

இதையடுத்து நாளை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளையில் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலுக்கும் அத்துடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதை தொடர்ந்து வருகிற 26 ஆம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு திருவாரூர் செல்லும் அவர், வருகிற 27 ஆம் தேதி நாகை கம்யூனிஸ்ட் கட்சி எம்பி செல்வராஜ் மகள் திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதன் பின்னர் மதியம் திருச்சியிலிருந்து விமானம் மூலமாக சென்னை வருகிறார்.

இந்நிலையில், இன்று திருச்சி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வரவேற்றனர்.