புதுடில்லியில் அமெரிக்க அதிபரை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

புதுடில்லி: புதுடெல்லியில் அமெரிக்க அதிபருடன் கைக்கூலுக்கிய படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இணையதளத்தில் பதிவேற்றி உள்ளார்.

ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதான பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி பிற நாடுகளின் தலைவர்களும் பங்கேற்று உள்ளனர்.

இந்த மாநாட்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு நேற்று இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து கைலுக்கினார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அப்படத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கினார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் ஆகியோர் அருகில் இருந்தனர்.