இந்த தேதிகளில் முதல்வர் 4 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம்

சென்னை: மார்ச் 5, 6ம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை , தேனி மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் .... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற புதிய திட்டத்தை கடந்த பிப் 1-ம் தேதி தொடங்கினார்.

இந்த திட்டத்தின்படி தமிழ்நாடு முழுவதும் மாவட்டவாரியாக சென்று பல்வேறு திட்டப் பணிகள் பற்றி முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். எனவே அதன்படி, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 போன்ற தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் ஆய்வு பணியை தொடங்கினார்.

இதையடுத்து இந்த மாதம் 15, 16 போன்ற தேதிகளில் சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் கள ஆய்வு நடத்தினார். இதந்தொடர்ச்சியாக அடுத்த மாதம் மார்ச் 5 மற்றும் 6-ம் தேதிகளில் மதுரை மண்டலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

அப்போது மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் அரசுப் பணிகள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.