ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்த தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா சந்தித்து பேசினார்.

2021ல் திமுக வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ்ரஞ்சன் மாற்றப்பட்டு, தலைமைச் செயலாளராக வி.இறையன்பு நியமிக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு கடந்த ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து நகராட்சி நிர்வாகத் துறை செயலாளராக இருந்த சிவதாஸ் மீனாவை புதிய தலைமைச் செயலாளராக வி.இறையன்பு நியமித்தார்.

அதன்படி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா ஜூன் 30ஆம் தேதி பொறுப்பேற்றார். இந்நிலையில் புதிய தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

கவர்னரின் அழைப்பின் பேரில் கவர்னர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா சந்தித்து பேசினார்.