அரசு நிலத்தில் உள்ள தர்காவை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மோதல்

குஜராத்: தர்காவை அகற்ற எதிர்ப்பு... குஜராத் மாநிலத்தில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட தர்காவை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஜூனாகத் பகுதியில் அமைந்துள்ள தர்கா அரசு நிலத்தில் கட்டப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் தர்காவில் நோட்டீஸ் ஒட்ட போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சென்றனர். அவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

கலவரக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மாவட்ட துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையினர் 4 பேர் காயமடைந்தனர்.

இந்த மோதல் தொடர்பாக 174 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோதலையொட்டி அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.