ஆயுத பூஜை, விஜயதசமி திருநாட்களை முன்னிட்டு தமிழக முதல்வர் வாழ்த்து

ஆயுத பூஜை, விஜயதசமி திருநாட்களை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து தமிழக மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஆயுத பூஜை, விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மனித வாழ்வில் ஏற்றம் பெற ஆற்றல், செல்வம், கல்வி ஆகியவை இன்றியமையாதது.

தமிழக மக்கள் எல்லா நலன், வளங்களுடன் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.