சி.ஆர்.சரஸ்வதியை நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நலம் விசாரித்த முதல்வர்... சென்னை அசோக் நகரில், மழைநீர் வடிகால் ஆய்வின்போது, தனது வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்று, அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை அசோக் நகர் 4 வது அவென்யூவில் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்துவிட்டு முதலமைச்சர் புறப்பட்டார்.

அப்போது, சி.ஆர்.சரஸ்வதி, தனது வீட்டின் அருகே சாலையில் நிற்பதைக் கண்ட முதலமைச்சர், வாகனத்தை விட்டு இறங்கிச் சென்று, நல்லா இருக்கீங்களா? என நலம் விசாரித்தார்.

அப்போது, அசோக் நகர் பகுதியில் மழைக் காலங்களில் வெள்ளம் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஆர்.சரஸ்வதி கோரிக்கை வைத்தார். அதற்கு, நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சரும் உறுதி அளித்திருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.