அரசு தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதல்வர் ஆய்வு

பரனூர்: முதல்வர் ஆய்வு... செங்கல்பட்டு அடுத்த பரனூரில் உள்ள அரசு தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் ஆய்விற்காக விழுப்புரம் மாவட்டம் செல்லும் வழியில், பரனூர் மறுவாழ்வு மையத்திற்கு சென்ற அவர், அங்குள்ள முதியவர்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது மறுவாழ்வு மையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் தரக்கோரி முதலமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.

அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்குமாறு அரசு அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.