என் கடைசி பாடலையும் பாட வா பாலு; வைரமுத்து உருக்கம்

வைரமுத்துவின் உருக்கமான வீடியோ... பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை குணமாகி மீண்டு வர வாழ்த்தி கவிஞர் வைரமுத்து உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசியுள்ள வைரமுத்து, தனது முதல் பாடலை பாடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தமது கடைசி பாடலையும் பாட வேண்டுமென கூறியுள்ளார்.

அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான ரோஜா படத்தில் வரும் காதல் ரோஜாவே பாடல் வரியை எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்காக பாடல் ராஜாவே என்று மாற்றி உருக்கத்துடன் வைரமுத்து பாடியும் உள்ளார்.