சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசுக் கப்பல் போக்குவரத்து தொடக்கம்

புதுடில்லி: இலங்கைக்கு சொகுசு கப்பல்... சென்னை-இலங்கை இடையே பயணிகள் சொகுசுக் கப்பல் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது.

மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

எம்.வி. எம்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்பட உள்ள பயணிகள் சொகுசுக் கப்பலை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த கப்பல் இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா, திரிகோணமலை, காங்கேசன் துறை ஆகிய 3 துறைமுகங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.