தொடர் கனமழை ..சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு

சென்னை: தேர்வு ஒத்திவைப்பு ......தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்றுக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இதையடுத்து இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்.


மேலும் இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 02-12-2023 வாக்கில் புயலாக வலுப்பெற கூடும்.வடஇலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக இன்று நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் வேறு எந்த தேதியில் நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை. நிர்வாகம் தெரிவித்துள்ளது.