தேனி மாவட்டத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா பாதிப்பு

தேனி மாவட்டத்தில் ஏற்கனவே 1,863 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், புதிதாக 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை மாவட்டம் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஏற்கனவே 1,863 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இன்று காலை புதிதாக 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,918 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 608 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் மேலும் 3 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.