3444 பேருக்கு கொரோனா... இந்தோனேசியாவில் புதிதாக 3,444 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 85 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
''புதிதாக 3,444 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,94,109-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் புதிதாக 2,174 பேர் குணமடைந்தனர்.
இதனால் மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 138,575-ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவின் 34 மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.
குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஜகர்தா பகுதியில் 1,176 பேரும்,
கிழக்கு ஜாவா பகுதியில் 303 பேரும், மேற்கு சுமத்ராவில் 244 பேரும், மத்திய
ஜாவா பகுதியில் 233 பேரும், தெற்கு சுலவேசி பகுதியில் 209 பேரும்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்'.' இவ்வாறு அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.