இன்று 4985 பேருக்கு கொரோனா பாதிப்பு... தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 4,985 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 4,985 பேர்களில் 1,269 பேர்கள்
சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு
அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 87,235 ஆக உயர்ந்துள்ளது என்பதும்
குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்றும் 2000ஐ குறைந்த கொரோனா
பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு
70 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2,551 ஆக
உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில்
இன்று 3,861 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர்.
இதனையடுத்து
தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 1,21,776 ஆக உயர்ந்துள்ளது. மேலும்
தமிழகத்தில் இன்று 52,087 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது
என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.