வேலூர் மாவட்டத்தில் மேலும் 166 பேருக்கு கொரோனா உறுதி

வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,932 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 166 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 150 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு தமிழகத்தில் இதுவரை 1,510 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கையில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,932 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 166 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,098 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 537 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.