மதுரை மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 14,575 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 5,976 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,51,827 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது மருத்துவமனையில் 51,633 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,92,507 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். ஆனாலும் இதுவரை 7,687 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 14,575 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,685 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 13,334 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 364 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கண்டிப்பாக வெளியில் செல்லும் போது முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.