விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு கொரோனா உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 106 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 63 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 76 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 22 ஆயிரத்து 496 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 3 ஆயிரத்து 95 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

13 ஆயிரத்து 594 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 19 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வீடுகளில் 184 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 106 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மருத்துவ பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படாத நிலையே நீடிக்கிறது.

கிராமப்புறங்களிலேயே பெரும்பாலும் பாதிப்பு இருந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் கிராமப்புறங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.