தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் மாநிலத்தில் 4 ஆயிரத்து 328 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது.
இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களும் அடங்குவர். நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 48 ஆயிரத்து 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டவாரியாக கொரோனா உயிரிழப்பு விவரம்:- அரியலூர் - 1 செங்கல்பட்டு - 65 சென்னை - 1,277 கோவை - 9 கடலூர் - 6 தர்மபுரி - 1 திண்டுக்கல் - 8 ஈரோடு - 7 கள்ளக்குறிச்சி - 6 காஞ்சிபுரம் - 52 கன்னியாகுமரி - 6 கரூர் - 5 கிருஷ்ணகிரி - 5 மதுரை - 120 நாகை - 1 நாமக்கல் - 1 நீலகிரி - 1 பெரம்பலூர் - 1 புதுக்கோட்டை - 8 ராமநாதபுரம் - 38 ராணிப்பேட்டை - 13 சேலம் - 9 சிவகங்கை - 14 தென்காசி - 2 தஞ்சாவூர் - 9 தேனி - 19 திருப்பத்தூர் - 1 திருவள்ளூர் - 129 திருவண்ணாமலை - 23 திருவாரூர் - 1 தூத்துக்குடி - 16 திருநெல்வேலி - 11 திருப்பூர் - 3 திருச்சி - 21 வேலூர் - 6 விழுப்புரம் - 19 விருதுநகர் - 17 விமானநிலைய கண்காணிப்பு - 1