தென் கொரியாவில் மீண்டும் அதிகம் பரவத் தொடங்கியது கொரோனா

தென்கொரியா: மீண்டும் தீவிரம் அடையும் கொரோனா... தென்கொரியாவில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதன்படி ஒரே நாளில் 1 இலட்சம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டின் கடந்த வாரத்தில் நாளாந்தம் பாதிப்பு சராசரி 72 ஆயிரத்து 735 ஆக இருந்தது. அங்கு நேற்று காலையுடன் முடிந்த ஒரு நாளில் புதிதாக 1 லட்சத்து 285 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

நேற்று முன்தினம் அங்கு 99 ஆயிரத்து 327 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அங்கு கொரோனாவின் கடுமையான பாதிப்பினால் 177 பேர் தீவிர சிகிச்சை பெறுகின்றனர்.

நேற்று ஒரு நாளில் 25 பேர் தொற்றால் இறந்தனர். இதனால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 932 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 0.13 சதவீதம் ஆகும்.