இந்தியாவில் கொரோனா பாதிப்பு 91 ஆயிரத்தை நெருங்குகிறது

புதுடில்லி: 91 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு... இந்தியாவில் இன்று (மே 17) கொரோனா பாதிப்பு 91 ஆயிரத்தை நெருங்கியது. 90,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,872 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 90,927 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 2,752 லிருந்து 2872 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 34,109 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 30,706 பேர் பாதிக்கப்பட்டு, 7,088 பேர் குணமடைந்துள்ளனர், 1135 பேர் பலியாகியுள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா - 30,706குஜராத் - 10,988தமிழகம் - 10,585டில்லி - 9,333ராஜஸ்தான் - 4,960ஆந்திரா - 2,355தெலுங்கானா - 1,509, கர்நாடகா - 1,092, கேரளா - 587 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு உள்ளது.