தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே கொரோனா தொற்று இரட்டிப்பு

சென்னை: ஒரே நாளில் இரட்டிப்பான கொரோனா தொற்று .... தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை உயர துவங்கியுள்ளதாக தமிழ்நாடு பொது சுகாதார இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே தமிழகத்தில் புதிதாக 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து சென்னையில் 3 பேருக்கும், கோவையில் 2 பேருக்கும், செங்கல்பட்டு, சேலம், நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு என கொரோனா தொற்று புதிதாக வந்து உள்ளது.

இதனால், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கும் கொரோனா தொற்று சோதனை தீவிர படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் உயர்ந்து வரும் கொரோனா தொற்றினால் உடனடியாக தமிழக பொது சுகாதாரத்துறை தனது கண்காணிப்பை கடுமையாக்கப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும், தற்போது வரைக்கும் தமிழகத்தில் எவ்வித உயிரிழப்பும் இல்லை என்றும், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் தற்போது அறிவித்துள்ளார்.