தமிழகத்தில் தினசரி கரோனா உயர்ந்து வருகிறது

சென்னை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதனை அடுத்து தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு 100-ஐ நெருங்கியுள்ளது.அந்த வகையில் தமிழகத்தில் நேற்று ஆண்கள் 51, பெண்கள் 46 என மொத்தம் 97பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து சென்னையில் மட்டும் 25 பேருக்கும், கோவையில் மட்டும் 21 பேருக்கும், செங்கல்பட்டில் மட்டும் 15 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குவைத்தில் இருந்து வந்தஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 96,110 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை மட்டும் 35 லட்சத்து 57,478 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 64 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 582 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை என தமிழக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.