கொரோனா செய்தி இளைஞர்களுக்கு எளிதாக கிடைக்க திட்டம்

அதிகாரிகள் திட்டம்... இளைஞர்களுக்கு கொவிட்-19 செய்திகளை எளிதாக கிடைக்க, வழிவகை செய்ய ஒன்ராறியோ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பாக ஒன்ராறியோவின் இளம் மக்கள்தொகையில் கொவிட்-19 நோய்த்தொற்றுகள் உயர்ந்து வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் தளங்களில் முன்னுரிமை கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், மக்களால் கேட்கப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக மாகாணம் பிற சமூக ஊடக சந்தைப்படுத்தல் விருப்பங்களை ஆராயும் என கூறினார்.

நாங்கள் டிக் டொக் மற்றும் பிற சமூக ஊடகப் பகுதிகளில் செய்தி அனுப்பப் போகிறோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.