தப்பியோடிய கொரோனா நோயாளிகள்... கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் அங்கிருந்து தப்பிவிட்டதாக கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு இவர்கள் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எஹெலியகொட பகுதியில் வசிக்கும் தாயும், மகனுமே இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இவர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர். இவர்கள் இருவரும் எப்படி தப்பிச் சென்றனர் என்பது குறித்து
விசாரணை நடந்து வருகிறது.
இவர்கள் சொந்த பகுதிக்கு சென்றனரா அல்லது வேறு
எங்காவது சென்றுள்ளனரா என்று தீவிர தேடுதலில் இறங்கி உள்ளனர்.