மதுரையில் வெகு வேகமாக பரவுகிறது கொரோனா; ஒரே நாளில் 464 பேருக்கு பாதிப்பு

மதுரையில் இதுவரையில் இல்லாத வகையில் 464 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெகு அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 4,328 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, தமிழகத்தில் சுமாராக இருந்து வந்த பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் புதிதாக 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 1,140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78,573 ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மதுரையில் இதுவரையில் இல்லாத வகையில் 464 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 352 பேருக்கும், திருவள்ளூரில் 337 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.