நாளுக்கு நாள் உயரும் கொரோனா பாதிப்பு; இன்று 1384 ஆக உயர்ந்தது

நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பால் மக்கள் மத்தியில் வெகுவாக அச்சம் எழுந்தள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் (குவைத் - 1, மகாராஷ்டிரா- 5, கேரளா - 1, தெலங்கானா - 4 ) 11 பேரும் அடக்கம். இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதித்து 12 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 10 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் முதல் முறையாக 30 வயதிற்குட்பட்ட இரண்டு பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். வேலூரைச் சேர்ந்த 25 வயதான இளம் பெண் மற்றும் சென்னையைச் சேர்ந்த 17 வயதான சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 585 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 14,901 ஆக அதிகரித்தது. தற்போது 12,132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.