திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 252ஆக உயர்வு

திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 231 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 231 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் வலங்கைமானைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் 5 பேர் உட்பட 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 252ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 105 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.