பாலிவுட் பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானது

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகம் ஆகி வருகிறது. அதிலும் பாலிவுட் பிரபலங்கள் பலர் வசிக்கும் மும்பையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எம்.பி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமிதாப் தற்போது டிவிட் செய்துள்ளார். அதில், எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். வீட்டு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்னும் முடிவு வரவில்லை. என்னுடன் கடந்த 10 நாட்களாக பழகிய எல்லோரும் உடனே கொரோனா சோதனை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.