டில்லியில் ஒரே நாளில் 1106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

ஒரே நாளில் 1106 பேருக்கு கொரோனா... டில்லியில் ஒரே நாளில் 1,106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,386 ஆக உள்ளது. டில்லியில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்விற்கு பின் கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஆனால் கடந்த வியாழன்று முதன் முறையாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000 ஐ கடந்தது. இந்நிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக பாதிப்பு 1,106 என்று ஆனது. இதுவரை டில்லியில் கொரோனாவுக்கு 398 பேர் பலியாகி உள்ளனர். பாதிப்பு அடைந்தவர்களில் 7,846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 50 சதவீதமாக உள்ளது என்று அது மேலும் தெரிவித்துள்ளது.