காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,731 ஆக உயர்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,683 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று மட்டும் புதிதாக 3 ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 51,699 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,683 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,731 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 755 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்டம் உட்பட 6 மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.