சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,812 ஆக உயர்வு

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 29,812 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 448 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 13 பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டினர்.

இதனால் கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,812 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உள்ளது. தினமும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.