தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக பாதிப்பு உச்சகட்டத்தை நோக்கி வந்து கொண்டிருகிறது. நேற்று மட்டும் மாநிலத்தில் புதிதாக 4 ஆயிரத்து 329 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 1,178 பேர் அடங்குவர்.
நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 58 ஆயிரத்து 378 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 1,385 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:- அரியலூர் - 463 செங்கல்பட்டு - 6,139 சென்னை - 64,689 கோவை - 645 கடலூர் - 1,143 தர்மபுரி - 107 திண்டுக்கல் - 618 ஈரோடு - 206 கள்ளக்குறிச்சி - 1,102 காஞ்சிபுரம் - 2,272 கன்னியாகுமரி - 489 கரூர் - 153 கிருஷ்ணகிரி - 170 மதுரை - 3,423 நாகை - 273 நாமக்கல் - 101 நீலகிரி - 119 பெரம்பலூர் - 164 புதுக்கோட்டை - 252 ராமநாதபுரம் - 1,143 ராணிப்பேட்டை - 978 சேலம் - 1,127 சிவகங்கை - 376 தென்காசி - 391 தஞ்சாவூர் - 478 தேனி - 927 திருப்பத்தூர் - 216 திருவள்ளூர் - 4,343 திருவண்ணாமலை - 2,181 திருவாரூர் - 513 தூத்துக்குடி - 1,055 திருநெல்வேலி - 921 திருப்பூர் - 197 திருச்சி - 803 வேலூர் - 1,667 விழுப்புரம் - 1,020 விருதுநகர் - 679