மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நாளை (புதன்கிழமை) தொடக்கம்

சென்னை: மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக கலந்தாய்வு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. சிறப்பு பிரிவு மற்றும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது.

இதனை அடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு 20-ந் தேதி (நாளை மறுதினம்) மட்டும் கலந்தாய்வு நடக்கிறது. இதில் சிறப்பு பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடியாக நடத்தப்படுகிறது.

மேலும் மற்ற பிரிவினருக்கு ஆன்லைன் வாயிலாகவே நடக்க உள்ளது. பொதுப் பிரிவினருக்கு நாளை தொடங்கும் கலந்தாய்வு 25-ந் தேதி வரையிலும், சுயநிதி கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 21-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரையிலும் நடக்கிறது.

எனவே இதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு நிறைவுபெற்று, 27 மற்றும் 28-ந் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, 30-ந் தேதி இறுதி முடிவுகள் வெளியிடப்படும். முதல் சுற்று கலந்தாய்வில் தேர்வானவர்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதி கல்லூரிகளில் சேரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.