சென்னை: தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என ஒருவன் புலம்பிக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக இளைஞரணி செயலி தொடக்க விழா மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அதில் முதலமைச்சர் தனது உரையைத் தொடங்கும் போது தமிழகம் எனக் கூறிய நிலையில், உடனடியாக மன்னிக்கவும் எனக் கூறியதோடு, தமிழ்நாடு எனக் குறிப்பிட்டு உரையைத் தொடங்கினார்.
ஒரே செங்கல்லை வைத்துக் கொண்டு உதயநிதி மேற்கொண்ட பிரச்சாரம் மக்கள் மனதில் புரட்சியை ஏற்படுத்தியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.