தொடர் விடுமுறை காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்


சென்னை: கோயம்பேட்டில் நிரம்பி வழிந்த கூட்டம் .... வார இறுதி நாட்களில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை மற்றும் கல்வி பெற்று வரும் நபர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகளில் அதிக அளவில் மக்கள் செல்வர்.

இதையடுத்து இந்த சூழலில் வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தின விடுமுறை என்று தொடர் விடுமுறை என்பதால் 4 நாட்கள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதலாக 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மேலும் மற்ற நாட்களை விட பல மடங்கு ஆம்னி பேரூந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டும் பல எழுந்து உள்ளன.