இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியா: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் 5,554 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 5,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதை அடுத்து இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 97 ஆயிரத்து 995 ஆக அதிகரித்துள்ளது. இதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 15 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,165 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,975 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 25 ஆயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நாட்டில் தற்போது 47,176 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் நாட்டில் 30.76 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 215 கோடியை தாண்டியுள்ளது.